இங்கே எத்தனை திருடர்கள் தோன்றியிருக்கிறார்களோ, அவர்களைக் காட்டிலும் நூறு மடங்கு திருட்டுக்கு எதிரிகளும் தோன்றியிருக்கிறார்கள். எத்தனை அயோக்கியர்கள் தோன்றியிருக்கிறார்களோ, அதே அளவு நேர்மையும் வளர்ந்து வருகிறது. எத்தனை குழப்பவாதிகள் உருவாகியிருக்கிறார்களோ அவ்வளவு தெளிவான சிந்தனைகளும், எத்தனை மரணங்கள் நிகழ்ந்தனவோ, அதே அளவு வாழ்க்கையின் மீதான பிடிப்பும் உறுவாகியிருக்கிறது.
சுயநலமிகள் எத்தனை மோசமாக நடந்து கொள்கிறார்களோ அத்தனை வேகத்துடன் பொது நலம் திருப்பித்தாக்கும். வரலாறு அத்தகைய தாக்குதலைக் காட்டியிருக்கிறது. எப்படி சோவியத் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சி உலகம் முழுவதும் புரட்சி விதைகளைத் தூவியதோ, எப்படி கியூபா என்ற சின்னஞ்சிறு தேசத்தின் வெற்றி லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் ஆன்மாவை உலுக்குகிறதோ, எப்படி துனீசியாவில் எழும்பிய முழக்கம் எதேச்சதிகார ஆட்சியாளர்களுக்கு சவால் விட்டு பரவியிருக்கிறதோ ... அப்படி ஒரு மாற்றத்தை நம் தலைமுறை சாதிக்கும்.
இதே இந்தியா, ஏற்றதாழ்வுகளின் அடையாளமாக அறியப்படுகிற நம் தேசம், தனது வருங்காலத்தை சூனியத்திடம் விட்டிருக்கவில்லை. மாறாக, நம்மைப் போன்ற ஏராளமான இளைஞர்களிடம் விட்டிருக்கிறது. கல்வியில், வேலைவாய்ப்பில், சுற்றுப்புற சூழல்களில், மொழியில் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தாலும் நம்மிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது, எல்லோருக்குமான நல்ல வாழ்க்கை கிடைக்கச் செய்யும் கனவு.
நாம் நம்பிக்கையை ஏந்துவோம். நெருப்பைப் போல நிமிர்ந்தே எரிவோம்.

0 கருத்துரைகள்:
Post a Comment