மேற்கண்ட கேள்வி. நண்பர் நிர்மல் கள்ளச்சாராயக் கும்பலை எதிர்த்த கம்யூனிஸ்ட் வெட்டிக் கொலை ! என்ற பதிவில் கேட்டது.

நீங்கள் ஒரு கம்யூனிஸ்டாக முயற்சி செய்துகொண்டிருப்பதாகச் சொன்னீர்கள். வருக நண்பரே ... ஆனால் ஒரு விசயம், மார்க்சியம் என்பது போராட்டங்களில் இருந்தும், மக்கள் அன்றாட வாழ்க்கையின் துன்பங்களுக்கு தீர்வைத் தேடுவதிலிருந்தும் கற்க வேண்டியது. எனவே, சில விளக்கங்களின் மூலம் ஒரு கம்யூனிஸ்டாக மாறிவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால். மன்னிக்கவும், அது சாத்தியமற்றது.

கள்ளச்சாராயக் கும்பலை ஏன் எதிர்க்க வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் உழைக்கும் வர்க்கத்தில் அன்றாட வாழ்க்கைப் பாட்டை இவர்கள் மேலும் சிக்கலாக்கி வருகிறார்கள். மேற்கண்ட கும்பலினால் சாதாரண மக்கள் துன்பத்திற்கு ஆளாகும்போது.  அவர்களை தடுக்க வேண்டிய சட்டமும் கைவிரித்தபோது தோழர்கள் களத்தில் இறங்கினார்கள்.

அதனால சமுகத்துக்கு / அரசாங்கத்துக்கு என்ன பலன்?
கள்ளாச்சாராயத்தை எதிர்ப்பதே கட்சியின் கொள்கையாக வைத்து செயல்பட்டால் நீங்கள் இப்படிக் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் இந்த அரசமைப்பின் மக்கள் விரோதச் செயல்கள் ஒவ்வொன்றையுமே எதிர்த்து வருகிறோம். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உழைக்கும் வர்க்கத்தில் உடனடிப் பிரச்சனையாக முன்னுக்கு வரும் பிரச்சனைகளின் உடனடி தலையீட்டைச் செய்கிறோம். அப்படியாக, தேவையை ஒட்டி இத்தகைய சமூக விரோதக் கும்பல்களை எதிர்க்கும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு கிட்டும்.

சாராயத்தில் என்ன, நல்லது / கெட்டது?
சாராயத்தில் நல்லது என்று சொல்ல முடியாது. சாராயம் ஒரு பண்டமாக இருப்பது சமூகத்தின் பிரச்சனை. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. சமூக மாற்றமே போதையற்ற வருங்காலத்திற்கு வழிவகுக்கும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

பிரபலமானவை...